Tuesday, May 25, 2021

திருமணம் கை கூட இந்தப் பாடல் கை கொடுக்கும்

திருக்கோட்டியூர் திருத்தலத்தில்  ராமானுஜருக்கு  திருக்கோட்டியூர் நம்பி அஷ்டாக்ஷர மந்திரத்தை உபதேசித்த போது  இம்மந்திரத்தை ரகசியமாகக் காக்கவேண்டும்...... பிரமாணத்தை மீறி  பொதுவாக அனைவருக்கும் உபதேசித்தால் உனக்கு நரகம்தான் என்றிருந்தார்.  


உலகம் உய்ய, பலர் பயன் பெற நான் நரகம் சென்றால் பரவாயில்லை என்று உலக மஹாகுரு ராமானுஜர் கோவில் விமானத்தில் ஏறி  போவோர் வருவோர் எல்லாம் கேட்கும்படி ஓம் நமோ நாராயணாய உரக்க சொன்னார். 


இப்படி சாபங்கள் பல இணைந்திருந்தாலும் உலகம் பயன் பெற பரப்புவதே பக்தனின் கடமை என்பதால், சாபம் ஏதும் இணையப்பெறாத ஒரு தகவலை இன்று பகிர்கிறேன் !




குடும்பத்தில் எவருக்கேனும்  திருமணத்தடை இருந்தால் கவலை வேண்டாம். கோவிலுக்கும் போகவேண்டாம் ...குளத்திலேயும்  முங்க  வேண்டாம்.  அஞ்சேல்  என்கிறது திருப்புகழ்.  அருணகிரிநாதர் அருளிய  இந்த திருப்புகழை பக்தி சிரத்தையுடன் ஓதினால் திருமணத்  தடைகள் நீங்கும்.  கோவிலுக்குப் போயும் ஓதலாம் (லாக் டவுன் முடிந்தபிறகு )


எட்டே வரிகள் .... மூன்றே நிமிடம், தொ(ல்)லைக் காட்சிக்கும், கைபேசிக்கும் ஓய்வு கொடுத்துவிட்டு பக்தியுடன் சம்பந்தப்பட்ட நபரைப் படிக்கச் சொல்லவும்.  பசி எடுக்கும் வயிற்றுக்குத்தானே அன்னமிடுவோம். என் குழந்தை ஊட்டினாலும்  சாப்பிடமாட்டேன் எனவே நான் சாப்பிடுகிறேன் என்ற தாயாரை நாம் இதுவரை பார்த்ததில்லை !


மீறி பெற்றோர்கள் சொன்னால் தவறில்லை ... என்ன ...அவர்களுக்கு  அறுபதாம் கல்யாணம் நடைபெறும். பரவாயில்லையா !

மகனுக்கு திருமணமா அல்லது பெற்றோர்களுக்கு 60ம் கல்யாணமா.... முடிவு உங்கள் கையில் !

மணிவாசகர் சொல்வது போல் "சொல்லிய பாட்டின் பொருளுணர்ந்து சொல்லுங்கள்" 


வைகாசி விசாகத்தன்று அடியேன் சொல்கிறேன். முருகப் பெருமான் கைவிடமாட்டார் !


நீலங்கொள் மேகத்தின் ...... மயில்மீதே
   நீவந்த வாழ்வைக்கண் ...... டதனாலே
      மால்கொண்ட பேதைக்குன் ...... மணநாறும்
         மார்தங்கு தாரைத்தந் ...... தருள்வாயே

வேல்கொண்டு வேலைப்பண் ...... டெறிவோனே
   வீரங்கொள் சூரர்க்குங் ...... குலகாலா
      நாலந்த வேதத்தின் ...... பொருளோனே
         நானென்று மார்தட்டும் ...... பெருமாளே.

நீலங்கொள் மேகத்தின் மயில்மீதே ... நீல நிறத்தைக் கொண்ட
மேகத்தைப் போன்ற மயில் மேலே

நீவந்த வாழ்வைக்கண்டதனாலே ... நீ எழுந்தருளிவந்த
புறப்பாட்டுத் தரிசனத்தைக் கண்ட காரணத்தால்

மால்கொண்ட பேதைக்கு உன் மணநாறும் ... உன்மீது ஆசை
கொண்ட இந்தப் பெண்ணுக்கு, உனது நறுமணம் மிக்க

மார்தங்கு தாரைத் தந்தருள்வாயே ... மார்பில் தங்கி விளங்கும்
மாலையைத் தந்து அருள்புரிவாயாக.

வேல்கொண்டு வேலைப்பண்டெறிவோனே ... உன்
வேலாயுதத்தைக் கொண்டு கடலினை முன்பு வற்றும்படி செலுத்தியவனே,

வீரங்கொள் சூரர்க்குங் குலகாலா ... வீரம் மிக்க சூரர்களின்
குலத்துக்கே யமனாக விளங்கியவனே,

நாலந்த வேதத்தின் பொருளோனே ... ரிக், யஜூர், சாம,
அதர்வண என்ற நான்கு அழகிய வேதங்களின் பொருளாக
விளங்கியவனே,

நானென்று மார்தட்டும் பெருமாளே. ... எல்லா உயிர்களுக்கு
உள்ளும் இருப்பவன் நான்தான் என்று பெருமை பாராட்டி மார்பினைத்
தட்டிக் கொள்ளும் பெருமாளே.


(வாரியார் சுவாமி புன்னாகவராளியில் பாடுவார். புன்னாகவராளியில் பாடினால் பாம்பு வராது பயப்பட வேண்டாம். பாம்பை அடக்கும் மயில் மீதேறி மாலோன் மருமகன்  உங்களுக்கு கருணை செய்ய மருமகனோடோ அல்லது  மருமகளோடோ வருவான்  )

தமிழ் படிக்கத்  தெரியாதவர்கள் ஆங்கிலத்திலும் தெலுங்கிலும்  படித்துப் பயன் பெறலாம் 

నీలన్గ్ కొళ్ మేగత్తిన్ ...... మయిల్మీదే
   నీ వన్ద వాzహ్వైక్ ...... కణ్డదనాలే
      మాల్ కొణ్డ పేదైక్కున్ ...... మణనాఱుమ్
         మార్ తన్గు తారైత్తన్ద్ ...... అరుళ్వాయే

వేల్ కొణ్డు వేలైప్ పణ్డ్ ...... ఎఱివోనే
   వీరన్గ్ కొళ్ సూరర్క్కున్గ్ ...... కులకాలా
      నాల్ అన్ద వేదత్తిన్ ...... పొరుళోనే
         నాన్ ఎన్డ్రు మార్ తట్టుమ్ ...... పెరుమాళే.

neelang koL mEgaththin ...... mayilmeedhE
   nee vandha vAzhvaik ...... kaNdadhanAlE
      mAl koNda pEdhaikkun ...... maNanARum
         mAr thangu thAraiththandh ...... aruLvAyE

vEl koNdu vElaip paNd ...... eRivOnE
   veerang koL sUrarkkung ...... kulakAlA
      nAl andha vEdhaththin ...... poruLOnE
         nAn endru mAr thattum ...... perumALE.





No comments:

குரங்கணில்முட்டம், இறையவளை உடனுறை வாலீஸ்வரர் கோவில்

தொண்டைநாட்டு தேவாரப்  பாடல் பெற்ற  தலங்களுள் ஆறாவது தலமாக அறியப்படும் குரங்கணில்முட்டம் (TNT 006), காஞ்சிபுரத்திற்கு அருகில், ஓரிக்கை, தூசி ...