Saturday, July 6, 2024

Thiruverkadu Vedhapureeshwara Temple (திருவேற்காடு பாலாம்பிகை உடனுறை வேதபுரீஸ்வரர் திருக்கோவில்)



Thiruverkadu  is famous for Karumariamman temple that  needs no introduction. Many donot know that there is a temple more than two millennium old in Thiruverkadu that of Balambiga Samedha VedhaPurishwara.

If you either live in Chennai or frequenting Chennai and if you have not visited this temple, you are certainly missing something.


The presiding deity is revered in the 7th century Tamil Saiva canonical work, the Thevaram, written by Tamil saint poets known as the Nayanars and classified as Paadal Petra Sthalam

This  Thevara Padal Sthalam, said to be more than 2500 years old. The temple may have been even older but the best part of structure we see today was built by a Chola King 2000 years back. (Picture below was not taken by me, but located in the internet; It is not a good idea is to take pictures of the sanctum sanctorum )








Lord Shiva is a Swayambhu Moorthy in this temple. Parvathi and Parameshwara are in divine human form behind the Shivalinga, showing the devotees (mainly Agasthya) their wedding form. In view of "Thirumana Kolam" or the Wedding snapshot at this sthala, he bestows marriage to people who seek to get married.

A rare temple where you can see Shiva Parvati  in human form as well as Lingha form in the same shrine.

Despite commercialisation, even today the temple looks quite clean and all maintained.

Locally popular for performance of 60th, & 80th birthdays, this temple is also popular for granting marriages to the unmarried.

Very close to Chennai and is the 23rd temple in Thondai mandalam sung in praise by the four Saivite greats.

The temple has an extra-large temple pond well deepened and kept away from misuse by anti-social elements.

Thiruverkadu gets its name from the fact that the sthala Vriksham (tree) is White Vela Maram (வெள்வேல் மரம்) . It is likely that long back the town was covered with a forest of Vel Maram and hence the name.


Besides Gnanasambhandar, Arunagiri natha swamy has also sung Thiruppugah in praise of Lord. Moorga Nayanar (one of the 63 Nayanmar was born in Thiruverkadu)


(One of the) Thevarams and a Thiruppugah attributed to this temple are given below:

Pazhanthakkaraakam is the equivalent of Suddha Saveri raga in the carnatic style and Durga in the Hindustani tradition.

Thevaram: 

ஒள்ளி துள்ளக் கதிக்கா மிவனொளி
வெள்ளி யானுறை வேற்காடு
உள்ளி யாருயர்ந் தாரிவ் வுலகினில்
தெள்ளி யாரவர் தேவரே.

பொழிப்புரை :

மிகவும் சிறந்த மெய்ப்பொருளை அன்போடு எண்ணினால் அவ்வெண்ணம் நற்கதிக்கு வாயிலாம். அத்தகைய மெய்ப்பொருளாய் வெண்மையான ஒளி வடிவினனாய் திருவேற்காட்டில் எழுந்தருளியுள்ள இவ்விறைவனை நினைந்தவர்கள் இவ்வுலகினில் உயர்ந்தவர் ஆவர். அவனைக் கண்டு தெளிந்த அவர்கள் தேவர்களாவர்.

குறிப்புரை :

மிகவும் உயர்ந்ததை எண்ணின் அது நற்கதிக்கு வாயி லாம்; ஆதலால் வேற்காடு எண்ணியவர்கள் இவ்வுலகில் தேவராவர் என்கின்றது. ஒள்ளிது - உயர்ந்தபொருளை. உள்ள - எண்ண. உள்ளம் - உயிருமாம். உள்ளியார் - எண்ணியவர்கள்.

பண் :பழந்தக்கராகம்

பாடல் எண் : 2

ஆட னாக மசைத்தள வில்லதோர்
வேடங் கொண்டவன் வேற்காடு
பாடி யும்பணிந் தாரிவ் வுலகினில்
சேட ராகிய செல்வரே.

பொழிப்புரை :

ஆடுதற்குரிய பாம்பினை இடையிற்கட்டிய, அளவற்ற பல்வேறு வடிவங்களைக் கொண்டருளிய திருவேற்காட்டு இறைவனைப்பாடிப் பணிந்தவர்கள், இவ்வுலகினில் பெருமை பொருந்திய செல்வர்கள் ஆவர்.

குறிப்புரை :

வேற்காடு பணிந்தார் இவ்வுலகில் பெரிய செல்வராவர் என்கின்றது. சேடர் - பெருமையுடையவர்.

பண் :பழந்தக்கராகம்

பாடல் எண் : 3

பூதம் பாடப் புறங்காட் டிடையாடி
வேத வித்தகன் வேற்காடு
போதுஞ் சாந்தும் புகையுங் கொடுத்தவர்க்
கேத மெய்துத லில்லையே.

பொழிப்புரை :

பூதகணங்கள் பாட, சுடுகாட்டின்கண் நடனம் ஆடி, வேதங்களை அருளிய வித்தகனாக விளங்கும் திருவேற்காட்டு இறைவற்கு மலர்களும், சந்தனமும், நறும்புகை தரும் பொருள்களும் கொடுத்தவர்களுக்குத் துன்பங்கள் வருதல் இல்லையாம்.

குறிப்புரை :

வேற்காட்டுநாதரைப் பூவுஞ்சாந்தும் புகையுங் கொண்டு வழிபட்டவர்க்கு ஏதம் எய்தாது என்கின்றது. புறங்காடு - சுடுகாடு. ஆடி - ஆடுபவன்; பெயர்ச்சொல். ஏதம் - துன்பம்.

பண் :பழந்தக்கராகம்

பாடல் எண் : 4

ஆழ்க டலெனக் கங்கைக ரந்தவன்
வீழ்ச டையினன் வேற்காடு
தாழ்வு டைமனத் தாற்பணிந் தேத்திடப்
பாழ் படும்மவர் பாவமே.

பொழிப்புரை :

ஆழமான கடல் என்று சொல்லத்தக்க கங்கை நதியை மறைத்துக்கொண்ட, விழுது போன்ற சடைமுடியினை உடைய திருவேற்காட்டு இறைவனைப் பணிவான மனத்தோடு வணங்கித் துதிப்பவர்களின் பாவங்கள் அழிந்தொழியும்.

குறிப்புரை :

பணிந்த மனத்தோடு ஏத்த பாவம் அழியும் என்கின்றது. ஆழ்கடல் எனக் கங்கை கரந்தவன் - பல மகாநதிகளைத் தன்னகத்து அடக்கிக்கொள்ளும் கடலைப்போல, கங்கையை அடக்கியவன். வீழ்சடை - விழுதுபோலும் சடை. தாழ்வுடை மனம் - பணிந்த உள்ளம். தாழ்வெனுந்தன்மை (சித்தியார்). பாவம் பாழ்படும் - பாவம் பயன் அளியாதொழியும்.

பண் :பழந்தக்கராகம்

பாடல் எண் : 5

காட்டி னாலு மயர்த்திடக் காலனை
வீட்டி னானுறை வேற்காடு
பாட்டி னாற்பணிந் தேத்திட வல்லவர்
ஓட்டி னார்வினை யொல்லையே.

பொழிப்புரை :

மார்க்கண்டேயர், சிவனே முழுமுதல்வன் எனக் காட்டினாலும், அதனை உணராது மயங்கி அவர் உயிரைக் கவரவந்த அக்காலனை அழித்த சிவபிரான் உறையும் திருவேற்காட்டைப் பாடல்கள் பாடிப்பணிந்து வழிபடவல்லவர் தம் வினைகளை விரைவில் ஓட்டியவர் ஆவர்.

குறிப்புரை :

இது பாடிப்பணிந்து ஏத்தவல்லவர் வினை ஓடும் என் கின்றது. காட்டினாலும் அயர்த்திடு அக்காலனை - மார்க்கண்டேயர் பூசித்து, சிவன் முழுமுதல்வன் என்பதைக் காட்டினாலும் அதனை உணராதே மயங்கிய காலனை. வீட்டினான் - அழித்தவன். ஒல்லை - விரைவு. காட்டினானும் என்ற பாடமும் உண்டு.

பண் :பழந்தக்கராகம்

பாடல் எண் : 6

தோலி னாலுடை மேவவல் லான்சுடர்
வேலி னானுறை வேற்காடு
நூலி னாற்பணிந் தேத்திட வல்லவர்
மாலி னார்வினை மாயுமே.

பொழிப்புரை :

தான் கட்டியும் போர்த்தும் உள்ள ஆடைகளைத் தோலினால் அமைந்தனவாகக் கொண்டுள்ள இறைவன் ஒளிபொருந்திய வேலோடு உறையும் திருவேற்காட்டை, ஆகம நூல்களில் விதித்தவாறு வழிபட்டுத் துதிக்க வல்லவர்களாகிய ஆன்மாக்களைப் பற்றிய மயங்கச் செய்யும் வினைகள், மாய்ந்தொழியும்.

குறிப்புரை :

விதிப்படி ஏத்தவல்லவர்க்கு வினைமாயும் என்கின்றது நூலினால் - ஆகம விதிப்படி. மாலினார் வினை - மயங்கிய ஆன்மாக்களினது வினை.

பண் :பழந்தக்கராகம்

பாடல் எண் : 7

மல்லன் மும்மதின் மாய்தர வெய்ததோர்
வில்லி னானுறை வேற்காடு
சொல்ல வல்ல சுருங்கா மனத்தவர்
செல்ல வல்லவர் தீர்க்கமே.

பொழிப்புரை :

வளமை பொருந்திய முப்புரங்களும் அழிந்தொழி யுமாறு கணை எய்த ஒப்பற்ற மேருவில்லை ஏந்திய சிவபிரான் உறையும் திருவேற்காட்டைப் புகழ்ந்து சொல்லவல்லவர்கள் சுருங்கா மனத்தினராவர். அங்குச் சென்று தரிசிக்க வல்லவர் நீண்ட ஆயுள் பெறுவர்.

குறிப்புரை :

இறைவனை எப்பொழுதும் பேசவல்ல குவியாமனத்து அடியவர்கள் நீடுவாழ்வர் என்கின்றது. தீர்க்கம் - நெடுங்காலம்.

பண் :பழந்தக்கராகம்

பாடல் எண் : 8

மூரல் வெண்மதி சூடுமுடியுடை
வீரன் மேவிய வேற்காடு
வார மாய்வழி பாடுநி னைந்தவர்
சேர்வர் செய்கழல் திண்ணமே.

பொழிப்புரை :

மிக இளைய வெண்மையான பிறைமதியைச் சூடும் திருமுடியை உடைய வீரனாகிய சிவபிரான் எழுந்தருளியுள்ள திருவேற்காட்டை, அன்போடு வழிபட நினைந்தவர், அப்பெருமானின் சிவந்த திருவடிகளைத் திண்ணமாகச் சேர்வர்.

குறிப்புரை :

அன்போடு வழிபடுவார் அடி அடைவர் என்கின்றது. மூரல் - இளமை. வாரம் - அன்பு.

பண் :பழந்தக்கராகம்

பாடல் எண் : 9

பரக்கி னார்படு வெண்டலை யிற்பலி
விரக்கி னானுறை வேற்காட்டூர்
அரக்க னாண்மை யடரப்பட் டானிறை
நெருக்கி னானை நினைமினே.

பொழிப்புரை :

பிரமனின் தலையோட்டில் பலியேற்கின்ற சமர்த்தனாகிய சிவபிரான் உறையும் திருவேற்காட்டில் அரக்கன் ஆகிய இராவணனின் ஆண்மையை அடர்த்துக் கால்விரலால் சிறிதே ஊன்றி நெருக்கிய அவனை நினைமின்கள்.

குறிப்புரை :

இராவணனது ஆண்மையை அடர்த்த இறைவனை நினையுங்கள் என்கின்றது. பரக்கினார் - உலகில் தன் படைப்பால் உயிர்களைத் தனு கரண புவன போகங்களோடு பரவச் செய்தவராகிய பிரமனார். விரக்கினான் - சாமர்த்தியமுடையன். விரகினான் என்பது எதுகைநோக்கி விரிந்தது.

பண் :பழந்தக்கராகம்

பாடல் எண் : 10

மாறி லாமல ரானொடு மாலவன்
வேற லானுறை வேற்காடு
ஈறி லாமொழி யேமொழி யாவெழில்
கூறி னார்க்கில்லை குற்றமே.

பொழிப்புரை :

ஒப்பற்ற தாமரை மலர் மேல் உறையும் நான்முகன், திருமால் ஆகியவர்களை வெற்றி கொள்வானாகிய சிவன் உறையும் திருவேற்காட்டு இறைவனைப் பற்றிய மொழியை ஈறிலாமொழியாக, அப்பெருமானுடைய அழகிய நலங்களைக் கூறுபவர்களுக்குக் குற்றமில்லை.

குறிப்புரை :

இறைவனைப்பற்றிய மொழியே ஈறிலாமொழியாக அதனை அழகுபெறக் கூறினார்க்குக் குற்றமில்லை என்கிறது. வேறலான் - வெல்லுதலையுடையான். வேறாகாதவன் எனலுமாம்.

பண் :பழந்தக்கராகம்

பாடல் எண் : 11

விண்ட மாம்பொழில் சூழ்திரு வேற்காடு
கண்டு நம்பன் கழல்பேணிச்
சண்பை ஞானசம் பந்தன் செந்தமிழ்
கொண்டு பாடக் குணமாமே.

பொழிப்புரை :

விரிந்த மலர்களையுடைய மாஞ்சோலைகள் சூழ்ந்த திருவேற்காட்டை அடைந்து, அங்கெழுந்தருளியுள்ள இறைவன் திருவடிகளைப் பரவி, சீகாழிப்பதியுள் தோன்றிய ஞானசம்பந்தன் உரைத்த இப்பதிகச் செந்தமிழ் கொண்டு பாடிப்போற்றுவார்க்கு நன்மைகள் விளையும்.

Thiruppugah: 


ஆலம்போ லெழுநீல மேலங்காய் வரிகோல

     மாளம்போர் செயுமாய ...... விழியாலே



ஆரம்பால் தொடைசால ஆலுங்கோ புரவார

     ஆடம்பார் குவிநேய ...... முலையாலே

சாலந்தாழ் வுறுமால ஏலங்கோர் பிடியாய
     வேளங்கார் துடிநீப ...... இடையாலே

சாரஞ்சார் விலனாய நேகங்கா யமன்மீறு
     காலந்தா னொழிவேது ...... உரையாயோ

பாலம்பால் மணநாறு காலங்கே யிறிலாத
     மாதம்பா தருசேய ...... வயலூரா

பாடம்பார் திரிசூல நீடந்தா கரவீர
     பாசந்தா திருமாலின் ...... மருகோனே

வேலம்பார் குறமாது மேலும்பார் தருமாதும்
     வீறங்கே யிருபாலு ...... முறவீறு

வேதந்தா வபிராம நாதந்தா வருள்பாவு
     வேலங்கா டுறைசீல ...... பெருமாளே

Meaning: 

ஆலம் போல் எழு நீலம் மேல் அங்கு ஆய் வரி கோல மாளம்
போர் செயு(ம்) மாய விழியாலே ... ஆலகால விஷத்தைப் போல்
எழுந்து நீலோற்பல மலருக்கும் மேலானதாக அங்கு அமர்ந்து, ரேகைகள்
கொண்டு அழகு வாய்ந்து, கண்டோர் இறந்து போகும்படிச் சண்டை
செய்ய வல்ல மாயம் நிறைந்த கண்களாலே,

ஆரம் பால் தொடை சால ஆலும் கோபுர ஆர ஆடம்பார்
குவி நேய முலையாலே ... முத்து ஆரம் தம்மேல் மாலையாக மிகவும்
அசைகின்ற, கோபுரம் போல் எழுந்து ஆடம்பரமாகக் குவிந்துள்ள,
அன்புக்கு இடமான மார்பகங்களாலே,

சாலம் தாழ்வுறும் மால ஏல் அங்கு ஓர் பிடியாய வேள் அங்கு
ஆர் துடி நீப இடையாலே ... மிகவும் இளைத்திருப்பதும், ஆசை தரக்
கூடியதாகப் பொருந்தி அங்கு ஒரு பிடி அளவே இருப்பதும்,
விருப்பத்துக்கு அங்கு இடமாய் நிறைந்ததும், உடுக்கை போன்றதுமான
இடுப்பாலே,

சாரம் சார்விலனாய் அநேகம் காய் யமன் மீறு காலம் தான்
ஒழிவு ஏது உரையாயோ ... (என்னை வாழவிடாமல் செய்யும்
விலைமாதரை விட்டு) வேறு புகலிடம் இல்லாதவனாய் இருக்கும் எனக்கு,
நிறைய பிறப்புகளில் என் உயிரைக் கவர்ந்து சென்ற யமன் என்னை
அதிகாரம் செய்து வென்று செல்லும் காலம் தான் நீங்குதல் என்றைக்கு
எனச் சொல்ல மாட்டாயோ?

பால் அம்பால் மண(ம்) நாறுகால் அங்கே இ(ஈ)றிலாத மாது
அம்பா தரு சேயே வயலூரா ... பூமியின் இடமெல்லாம் கடல் நீரால்
சேர்க்கைதோன்றுங்கால் (பிரளய காலத்தில்), அப்போதும் அழிவில்லாத
தேவி அம்பிகை பெற்ற குழந்தையே, வயலூரில் குடிகொண்டுள்ள
தெய்வமே,

பாடு அம்பு ஆர் திரி சூல நீடு அந்தக அர வீர பாசம் தா
திருமாலின் மருகோனே ... பெருமை வாய்ந்த அம்பு போல கூர்மை
வாய்ந்த முத்தலைச் சூலத்தால், மேம்பட்டு நின்ற அந்தகாசுரனை*
வருத்தின வீரனாகிய சிவன் மீது அன்பைப் பொழியும் திருமாலின்
மருகனே,

வேல் அம்பு ஆர் குற மாது மேல் உம்பார் தரு மாதும் வீறு
அங்கே இரு பாலும் உற வீறு ... வேல் போலவும் அம்பு போலவும்
(உள்ள கண்களைக் கொண்ட) குறப் பெண்ணாகிய வள்ளியும், தேவர்கள்
வளர்த்த தேவயானை அம்மையும் பெருமிதத்துடன் அங்கே இரண்டு
புறமும் பொருந்த விளங்க

வேத அந்தா அபிராம நாத அந்தா ... வேதத்தின் முடிவில்
இருப்பவனே, அழகனே, ஒலியின் முடிவில் இருப்பவனே,

அருள் பாவு வேலங்காடு உறை சீல பெருமாளே. ...
திருவருளைப் பரப்பும் திருவேற்காட்டில்** வீற்றிருக்கும் தூயவனே,
பெருமாளே.

No comments:

குரங்கணில்முட்டம், இறையவளை உடனுறை வாலீஸ்வரர் கோவில்

தொண்டைநாட்டு தேவாரப்  பாடல் பெற்ற  தலங்களுள் ஆறாவது தலமாக அறியப்படும் குரங்கணில்முட்டம் (TNT 006), காஞ்சிபுரத்திற்கு அருகில், ஓரிக்கை, தூசி ...