Friday, February 28, 2020

ஆட்சீஸ்வரர் திருக்கோவில் அச்சரப்பாக்கம்




சைவக்குரவலர்கள் நால்வராலும் பாடப்பட்ட ஸ்தலங்களில் தொண்டை மண்டல  ஸ்தலங்கள் குறைவு. அப்பெருமைக்குரிய தொண்டை நாட்டுத்தலம்,  நாட்டு  மேல்மருவத்தூர் சமீபமுள்ள அச்சரப்பாக்கம். சென்னை-திண்டிவனம் சாலையில் மேல்மருவத்தூர் அடுத்துள்ளது இவ்வூர். ஜி.எஸ்.டி சாலையின் மேலேயே அமைந்துள்ள சிற்றூர்.


தந்தையின் கோவில் அதிக பழமை கொண்டதாக இருந்தாலும், மைந்தன் முருகன் பெயரில் அமைந்த கோவில் அதிக பிரபலம் (அச்சரப்பாக்கம் முருகன் கோவில் குன்றின் மேல் அமைந்தது.  மகன் குன்றுதோறும் ஆடுவாரென்றால், அப்பா மன்று(அம்பலம்)தோறுமாடுபவர் (எனவே மன்றாடி).


இரு கர்ப்பக்கிரகங்களை உடைய ஆட்சீஸ்வரர் கோவில் (உமை ஆட்சீஸ்வரர் மற்றும் எமை ஆட்சீஸ்வரர்). ஆறாம் நூற்றாண்டில் கட்டப்பட்டதாக இருந்தாலும், சுயம்புவாக தோன்றிய சிவலிங்கம் பழமை குறிப்பிடமுடியாத அளவு  புராதானமானது .  அப்பனுக்கு இரு சந்நிதி இருந்தால் அம்மைக்கும் இரு சந்நிதி இருக்குமல்லவா. உமையாம்பிகை மற்றும் இளங்கிளி அம்மை என்ற பெயர்களில் அன்னை அருள் புரிகிறாள்.


பதவி  உயர்வுகள் வேண்டி இத்தலத்தில் பிரார்த்திப்பவர்கள் அதிகம் என கேள்விப்படுகிறோம்.








அமைதியான கிராமம், ஐந்து மாடங்களை உடைய  ராஜகோபுரம்., தெப்பக்குளம், அருமையான பழமையான பிரகாரங்கள், நன்கு பராமரிக்கப் படுகின்ற கோவில் என எல்லா விதத்தில் நம் மனதை ஈர்க்கிறது. அடியேன்  இக்கோவிலில் தரிசனம் பெற சென்ற நாள் சிவனுக்குகந்த சிவராத்திரி முன்தினம்  என்பதால்,  தேவாரப்பாடல்களை பக்தர்கள் இசைக்க கோலாகலப் பட்டது.




ஒரே வேரிலிருந்து இரு தென்னை மரங்கள் இத்தலத்தின் சிறப்பு.   அசுரர்களை அழிக்க  புறப்பட்ட சிவன் இங்குள்ள அச்சுமுறி விநாயகரை வாங்கியதாகவும் ஸ்தல புராணம் கூறுகிறது.


அகத்திய ரிஷிக்கு அய்யன் திருமணக் கோலம் காட்டிய 17 தளங்களில் ஒன்று என்பதால் இத்தலத்தில் லிங்கத்திற்கு பின் புறம் உமையுடன் கூடிய பெருமானை திருமணக் கோலத்தில் காணலாம். கண்வ மகரிஷி மற்றும் கௌதம ரிஷிகள் இத்தலத்தில் இறைவனருள் பெற்றதாக வரலாறு கூறுகிறது.




பல்வேறு பெருமைகளை உள்ளடக்கிய இந்த பாடல் பெற்ற ஸ்தலம் பக்தர்களின் வசதிக்கேற்ப சென்னை-மதுரை சாலையிலேயே அமைந்துள்ளது. சொந்த வாகனத்தில் செல்லும் பொது ஒரு அரை மணி நேரம் ஒதுக்கினால் இந்தக் கோவிலுக்கு செல்லும் பாக்கியம் பெறலாம்.


கோவில் பற்றிய தகவல்களுக்கு:
http://www.acharapakkamaatcheeswarartemple.tnhrce.in/index.html











Thursday, February 27, 2020

ஞீலிவனேஸ்வரர் கோயில், திருப்பைஞ்ஞீலி





திருப்பைஞ்ஞீலி என்பது தமிழ், ஆங்கிலம் அல்லது வேறு எந்த மொழியிலும் எழுதுவதற்கும் , உச்சரிப்பதற்கும கடினமான பெயர். பெரிய இடங்கள் பெரிய +கடினமான  பெயர்களுடன் தொடர்புடையவையாக இருப்பதில் ஆச்சரியமென்ன ?



திருச்சி நகரத்திற்கு வெளியே உள்ளவர்களுக்கு அதிகம் அறியப்படாத கோயில்களில் ஒன்றான இந்த கோயில், குழந்தைகளின் திருமண தாமதத்தைப் பற்றி கவலை கொண்டுள்ள பெற்றோர்களின் ஆபத்சகாயன்.   .



ஆமாம், இது ஒரு திருமணத்தடை  (தோஷ) பரிஹார ஸ்தலம். இவ்விடம் குடி கொண்டுள்ள இறைவன்  திருமணமாகாதவர்களுக்கு விரைவில் திருமணத்தை  ஆசீர்வதித்து அருளுகிறார்..



சைவக்குரவலர்கள்  அப்பர், சுந்தர் மற்றும் ஞானசம்பந்தர் ஆகியோரால் புகழ்ந்து  பாடப்பட் ட  கோயில்களில் ஒன்றான இந்த கோயில் கருவறை 6 ஆம் நூற்றாண்டுக்கு முந்தையது. மற்ற கட்டமைப்புகள் பிந்தைய காலப்பகுதியில் உருவாக்கப்பட்டுள்ளது . ராஜ ராஜ சோழர் மற்றும் ராஜேந்திர சோழர் ஆகியோரால் வைக்கப்பட்ட கல்வெட்டுகள்  இக் கோயிலின் பழைமையைப்  பற்றிய சான்றுகளை அளிக்கிறது.



 வாயு தேவன்  (ஒரு தீவிரமான புயலான) சண்டமாருதத்தை வீசியபோது தூக்கி எறியப்பட்ட கைலாச மலையின் ஒரு பகுதி  ஸ்வேதகிரி. இப்போது திருப்பைஞ்ஞீலி என்று அழைக்கப்படுகிறது .



ஞீலிவனநாதர்  (கதலிவனநாதர்) இத்தலத்தில்  சுயம்பு மூர்த்தி.



கோயிலுக்கு வாழை என்று பொருள்படும் ஞீலி என்பதிலிருந்து இந்த பெயர் வந்தது. இந்த க்ஷேத்ரத்தில்  சப்தமாதர்  அல்லது ஏழு கன்னிகையர் இறைவன் இறைவியுப் பூஜித்த போது  இந்த க்ஷேத்திரத்தில் வாழை மரங்களின் வடிவத்தில் இருக்க அருளப்பட்டதால் , இப்  பெயர். 



 சிவனின் பாதத்தின்  கீழ் ஒரு குழந்தையாக தோன்றிய எமதர்மராஜனின்  மறுபிறப்புடன் இந்த கோயில் தொடர்புடையது.  (சிவன் இந்த கோவிலில்  ஒரு அரிய கருங்கல்லால்  ஆன சோமஸ்கந்த வடிவத்தில் உள்ளார். மற்ற கோவில்களில் பஞ்சலோக சோமாஸ்கந்தரையே காணலாம்). இந்த ஆலயத்தில் எமதர்மராஜனின்   மறுபிறப்புடன்  தொடர்புடையதால் , இந்த கோயில் பக்தர்களுக்கு இழந்த தொழில் , வாழ்க்கையை மீட்டெடுத்தல் , வழக்குகளில் வெற்றி, கடன்-நிவாரணம்  மற்றும் நீண்ட ஆயுளை வழங்குகிறது.


 திருநாவுகாரசருக்கு இந்த கோவிலில் அன்னம் (அரிசி) மற்றும்  இறைவன் தரிசனம் வழங்கப்பட்டது. துறவிக்கு உணவு கொடுத்த இறைவனை சோற்றுடைய  ஈஸ்வரர் என்று அழைக்கிறார்கள்.



இந்த கோவிலில் நடராஜர் வடிவத்தில் இறைவனை வழிபடும் வாய்ப்பு வசிஷ்ட முனிவருக்கு கிடைத்தது.



ராவணனை வெல்வதற்கு முன்பு ராமர் இங்கு இறைவனை வணங்கினார்.



கோயில் நன்கு பராமரிக்கப்படுகிறது. இது ஒரு பரிஹார ஸ்தலம் என்பதால் அர்ச்சகர்கள்  மற்றும் அதிகாரிகளால் சுரண்டப்படுவதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளன, ஆனால் ஆச்சரியப்படும் விதமாக அது மிகவும் குறைவாகத் தெரிகிறது .



கோவில் அலுவலகம் பரிஹாரத்திற்காக இங்கு வரும் எண்ணற்ற பக்தர்களை ஒழுங்குபடுத்துவதோடு மட்டுமல்லாமல், அவர்களை ஒழுங்கமைக்கப்பட்ட முறையில் சிறு குழுக்களாக  கையாளுகிறது. பூஜை பொருட்களை மிகக் குறைந்த விலையில் விநியோகிப்பதோடு டோக்கன் முறையும் பாராட்டுக்குரியது.


ராஜ கோபுரம்  முழுமையடையவில்லை. கடவுள் விரும்பும் போது அது வரும், ஆனால் அது வரும்போது அது ஒரு பெரிய கோபுரமாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை . கோயில் சுற்றுச் சுவர்கள் (பிரஹார சுவர்கள்) மிக நேர்த்தியானவை (உயரமானவை மற்றும் பருமனானவை).



பிரபலமான பரிஹார ஸ்தலமாக  இருந்தபோதிலும், கோயில் நன்கு பராமரிக்கப்படுகிறது. கோயில் சூழல் உங்களை எண்பதுகளுக்கு அழைத்துச் செல்லும்.



உங்கள் வாழ்நாளில் நீங்கள் தவறவிடக்கூடாத ஒரு அழகான கோயில்.



Gneelivaneswarar Temple, Thirupaingneeli




Thirupaingneeli is a tough name to pronounce as well as spell, in Tamil, English or any other language.  Great places are associated with great names isn't it ?

One of the lesser known temples to people outside Trichy, this temple is however famous with many parents concerned about delay in their children's marriage.

Yes, this is a Kalatra Dosha Parihara Sthalam, which helps unmarried to be blessed with wedlock sooner.

One of the temples sung in praise by the Savite Greats Appar, Sundarar and Thirugnana Sambandar, this temple dates back to the 6th century and earlier, with regard to the Sanctum Sanctorum , even if the other structures were developed over a period of time.  Insciptions placed by Raja Raja Chola & Rajendra Chola are available, giving evidences on the vintage of the temple.

Swethagiri is one of the eight peaks of Mount Kailash which was thrown apart when Vayu blew the Sanda Marutham, an intense storm. Swethagiri is now called Thiruppaingneeli.



Presiding Lord Kathalivana Nathar (Gneelivana Nathar) is a Swayambhu moorthi.

The temple derives its name from Gneeli, meaning Banana.  Saptha Mathas or the Seven Kannikas workshipped at this place and they were granted to be in the shape of Banana trees at this Kshetra, and hence the name for the temple. This place was also called the  Forest of Kal Vazhai and consequently the village became Thirupaingneeli.

This temple is associated with the Rebirth of Yama as a child under the feat of Shiva at this temple (Lord Shiva could be seen in a rare Somaskanda form in Black granite in this temple as opposed to Panchaloka Somaskanda in other temples). In view of Rebirth of Yama at this shrine, this temple grants the devotees with Resurrection of lost career, success in litigation, debt-clearance and long life.

Saint Thirunavukkarasar was granted Lord's Darshan at this temple, besides Annam (rice). The lord who gave food to the saint is appropriately called Sottrudaya Easwarar.

Sage Vasishta had the opportunity to worship Lord at this temple in the form of Nataraja.

Many others worshipped Lord here including Rama before conquering Ravana.

The temple is well maintained. This being a Parihara sthalam there is a potential for exploitation by the priest and officers, but surprisingly it is  very subdued.

The temple office not only regulates Devotees coming here for pariharam, but also handles them in batches in an organised manner. The token system accompanied by distribution of pooja items for a very small price, deserves appreciation.

Raja Gopura is incomplete, and will come up when God wishes, but when it comes up it will be a huge tower. Temple compound walls (Prahara walls) are quite hefty, both tall and deep.

Despite being a popular parihara sthalams, the temple is well maintained.  Temple surroundings will take you to the eighties.

A beautiful temple that you should not miss in your life time.

Friday, February 21, 2020

Sivan Malai Alapakkam ancient cave temple Chengalpattu





I had the fortune accidently stopping over at  Sivan Malai Temple which is on the outskirts of Chengalpattu but within the city limits. A small hill Temple located in the beginning of the hillock amidst green surroundings and water bodies,  this Temple is fit to be bracketed with famous cave temples like Thiruparankundram, Chittannavasal and  the like. Built by Mahendra Verma the famous Pallava king in the sixth century, this  Temple has its own tank from where water is drawn for  performing Abhishekam for the Lord. Some 50 odd steps take you to the temple which is in two or three levels.










Before we  go any further to know about the temple it is necessary know Shri Chellappa who is is not only the priest of the temple but also the person who has painstakingly spent his savings, physical energy and emotional energy to maintain this Temple all these years without any support from anybody.



All devotees will be grateful to his sincere efforts over the last 63 years. We understand that today his sons  are supporting him but  it is tireless efforts of this individual this Temple is what it is today.


Mahendra Varma Pallava was originally a Jain converted to Hinduism and he very well understood importance of being balanced to all beliefs. This Temple houses Vaishavite Lord Vishnu, Saivaite Lord Shiva and ID AccuWeather Ashu other Lords


Very  similar to the cave temples like  Thiruparankundram and chittannavasal the Lords are carved out of the walls of the rocks.  Lord Shiva Lord Vishnu Vinayaka Subramanya Saneeswara and his wife Jyeshta are housed in this Temple.

Such  temples are generally taken over by the Archaeological survey of India (AS)  which makes sure the temple is is locked, no Pooja is offered, no upkeep is done etc. Only effort which Archaeological Survey does is to put their board warning uses what is visitors that action will be taken if the temple is  used in any manner without their permission.  



Barring a few temples most of the sites taken over by ASI see no development or upkeep. Fortunately this Temple has not drawn their attention yet. Daily Poojs are  done by priest purely from his  personal resources, pension and retirement savings. The greatest regret Sri chellappa has is  that most of the days theret are not any  devotees in the temple.  But  that does not him from performing passionate service to the Lord. This is a must visit  Temple for or all Chennai and Chengalpattu residents,  thanks to The proximity of the temple to these cities.

Wednesday, February 12, 2020

அண்ணாமலையார் அறப்பணிக் குழுவின் உழவாரப் பணி - ஆதிகேசவப் பெருமாள்கோவில் பாகசாலை



தில்லைவாழ் அந்தணர்தம் அடியார்க்கும் அடியேன்
 திருநீல கண்டத்துக் குயவனார்க் கடியேன்

என்று  சுந்தரமூர்த்தி நாயனார் அவர்கள் தனது முதல் தேவாரப் பாடலை தொடங்குகிறார்.  முதல் பாடலை ஆண்டவனைப் பற்றி பாடாமல் அடியார்களைப் பற்றி ஏன் பாடவேண்டும் ! சைவக்குரவலர்கள் நால்வரில் சுந்தரர் மேல் இறைவனுக்கு   அதிக அன்பு. ….காரணம்…. மற்றவர்கள் ஆண்டவனைப் பற்றி பாடியபோது சுந்தரர் அடியார்களின் சிறப்பு பற்றி பாடியதால் ! இதனால் அடியார்களின் முக்கியத்துவம்  நமக்கு நன்கு புரிகிறது.

அடியார் என்றால் ஆண்டவனை  இவர்கள் அடி பணிபவர்கள் என்று பொருள் அல்ல ! ஆண்டவனை தொழுபவர்கள்/ பணிபவர்கள் வெறும் பக்தர்கள் ! ஆண்டவனுக்கு கொண்டு செய்பவர்களே உண்மையில் அடியார்கள் 

இந்து மத நம்பிக்கையின்படி, ஆண்டவனுக்கு   பொன்னால் அணிகலன்கள் செய்து அழகு பார்ப்பதை விட  அடியார்களுக்கு அன்னமிடுவது மேலானது ! திருக்கோவிலுக்கு பொருளுதவி செய்ததைவிட மேலானது உடலால் உழைப்பதென்பது.! 

அடியாரது  கடமையான தொண்டை தான் மட்டும் அல்லாது பிற அடியார்களையும் ஒருங்கிணைத்து இறைவனுக்கு  தொண்டு செய்வது சாலச்சிறந்தது. இந்த சேவையை ஒருநாள் செய்யலாம் ஒரு மாதம் செய்யலாம் ஆனால் 15 ஆண்டுகளாக தொடர்ந்து செய்வதென்பது சாதாரண  காரியமும் அல்ல சாமான்யமான காரியமும் அல்ல

அந்த அசாதாரணமான கைங்கரியத்தை எந்த ஒரு பிரதி பலனையும் எதிர்பாராமல்  தொடர்ந்து செய்துவரும் சென்னையைச் சேர்ந்த “அண்ணாமலையார் அறப்பணிக்குழு” வின் சேவை பாராட்டுதற்குரியது

Rupee saved is Rupee earned என்ற ஆங்கில பழமொழிக்கேற்ப  கோவில் கட்டுவதை விட சிதிலமடைந்த கவனிப்பாரற்றுக் கிடக்கும் கோவில்களை செப்பனிட்டு, நின்று போன இறை பணி தொடரச் செய்வது உயர்ந்த பக்தி என்ற வகையில்  அண்ணாமலை அறப்பணிக் குழு சிதிலமடைந்த பல கோவில்களை இவ்வுலகுக்கு மீட்டுத் தந்துள்ளது.

2020 பிப்ரவரி ஒன்பதாம் தேதி என்று  திருவாலங்காட்டை அடுத்துள்ள பாகசாலை என்ற  சிறுகிராமத்தில் சிதிலமடைந்த ஸ்ரீதேவி பூதேவி உடனுறை ஆதிகேசவப் பெருமாள் திருக்கோவிலில் இக்குழு  உழவாரப் பணி மேற்கொண்டது. 


பச்சைப்பசேல் என்ற கிராமம்,  அகலம் குறைவாக இருந்தாலும் மிகவும் நேர்த்தியான சாலை,  அக்கம் பக்கத்தில் கோவில்கள் என்று கண்ணிற்கும் மனதிற்கும் பிரம்மிப்பை தரக்கூடிய அழகான சூழல் ! அன்று அவ்வூர் வந்தவர்கள் பாக்கியவான்கள் . 

ஜனசந்தடி அற்ற சிறு ஊராக இருந்தாலும் ஊராட்சி அலுவலகம்,  கொசஸ்தலை ஆறு, அருணகிரிநாதரால் திருப்புகழ் பாடப்பெற்ற முருகனின் திருத்தலம், திருமூலநாதர் என்ற பெயரில் இங்கு குடி கொண்டுள்ள  சிவபெருமானுக்கு அருமையான ஒரு திருக்கோவில் மற்றும் ஆதிகேசவபெருமாள் இருக்கும் ஒரு கோவில் என்று பல “அருமை”கள் . மற்றைய கோவில்கள் சமீபகாலத்தில் மராமத்து பணிகள் செய்யப்பட்டு கும்பாபிஷேகம் ஆனதாக தெரிகிறது. ஆனால் பெருமாள் தனது கோவிலை புதுப்பிக்க நேற்று வரை உத்தரவு கொடுத்ததாக தெரியவில்லை.  இன்று அவர் ஆணையின்படி (அவன் அருளாலே அவன் தாள் வணங்கி என்ற மாணிக்கவாசகரின் வார்த்தைக்கு இணங்க) பணிகள் தொடங்கினர்.

 திரு ராமச்சந்திரன் மற்றும் நண்பர்களின் 15 வருட உழைப்பின் அடையாளமான அண்ணாமலையார் அறப்பணிக்குழு வாயிலாக பெருமாள் கோவில் உழவாரப்பணி தொடங்கியது.  சுமார் 120 தொண்டர்களைக் கொண்ட குழுவில் ராஜலட்சுமி பொறியியல் கல்லூரி மாணவர்கள் சுமார் 60 பேர் அடக்கம்.

காலை ஏழு மணிக்கு பூந்தமல்லியில் தொடங்கிய பயணம் ஒன்பது மணிக்கு தொண்டர்களை கோவிலுக்கு அழைத்துச் சென்றது. 10 நிமிட காலை சிற்றுண்டிக்கு பிறகு தொடங்கிய பணி சுமார் நான்கு மணிவரை நடைபெற்றது. பாகசாலை ஊரை சேர்ந்த சுமார் 20 பேர்களும் தங்களை உழவாரப் பணியில் ஈடுபடுத்திக் கொண்டனர் கடப்பாறை, மண்வெட்டி,  இயந்திர மரவெட்டி போன்ற தங்களது உபகரணங்களை தவிர நாள் வாடகையில் டிராக்டர் மற்றும் பொக்லைனை பணியில் ஈடுபடுத்தினர்.

 கம்போடியா அங்கோர்வாட் பார்க்காதவர்கள் கூட,  மரங்களால் ஒரு பெரிய கல் கட்டிடத்தையே ஆக்கிரமிக்க முடியும் என்று கோவிலை பார்த்தது தெரிந்து கொண்டனர்.  கோவிலை விட இரண்டு மடங்கு உயரத்தில் ஒரு அரசமரம், அரச மரத்திற்கு மனைவியாக ஒரு பெரிய வேப்பமரம், குழந்தைகளாக பற்பல சிறு மரங்கள், கொடிகள், முற்செடிகள் என ஒரு பெரிய குடும்பமே இக்கோவிலை ஆக்கிரமித்து கட்டிடத்தை உபயோகமற்று செய்துவிட்டது.  மரங்களை செடிகொடிகளை ஓரளவு வெட்டினால் தான் கோவிலைக் கண்ணால் பார்க்க முடியும் என்ற நிலைமை !

உள்ளூர் தமிழ்க்  “குடி” மகன்களின் பொருள் உதவியாக கோவிலைச்  சுற்றியுள்ள புதர்களினுள்ளே குறைந்தது 200-300 சோமபானக்  குடுவைகள்!
கோவிலுக்கு பொன்னாக கொடுக்க முடியாதவர்கள் பொருளாகக்  கொடுக்கலாம் என்பதை தவறாகப் புரிந்துகொண்ட. “பிராந்திய”வாசிகள்! 

 இதுபோன்ற பல கோவில்களை செப்பனிட்ட அனுபவத்தின் வாயிலாக சுமார் ஒரு மணி நேர திட்டமிடலுக்கு பின் அனுபவம் வாய்ந்த அடியார்கள் கோவிலின் மேல் ஏறி ஆக்கிரமித்திருந்த மரங்களை சிறுசிறு துண்டுகளாக வெட்டி அப்புறப்படுத்தினர். 

 பெரிய துண்டுகளாக செய்வது விரைவாக பணியை முடிக்க உதவுமென்றால்  கூட அப்பெரிய துண்டுகளால் கோவிலின் கட்டிடத்திற்கு பாதிப்பு ஏற்படலாம் என்பதால் மரங்களை சிறிது சிறிதாக வெட்ட  வேண்டியிருந்தது. 

ஒரு குழு பொக்லைன் உதவியால் கோவிலைச் சுற்றியிருந்த கல் மண் போன்றவற்றை அப்புறப்படுத்திய அல்லது சமன்படுத்தி கொண்டிருந்தது…. மற்ற குழுக்கள் சிறு சிறு மரங்களை, செடிகளை,  புதர்களை வெட்டி அப்புறப்படுத்தி கொண்டிருந்தனர். சுமார் 5 அல்லது 6 மணி நேர உழைப்பிற்கு பின் கோவிலின் முழு விஸ்தீரணம் புலப்பட்டது.  


அடியார்கள் பலரின் கல்வி,  தொழில் பின்னணி ஆச்சரியப்படுத்த வகையில் இருந்தது.   அவர்களுக்கு தங்களை சாதாரண மனிதர்களாக நினைக்கத் தோன்றுவதால் தங்களது பெயர்களையோ வாங்கிய பட்டங்களையோ அல்லது உயர்பதவியையோ  எவருக்கும் பெருமையாக சொல்லிக் கொள்வதில்லை நான் இறைவனுக்காக மண், குப்பைகளை அள்ளும் சாமானியன் என்பதிலேயே அவர்களுக்கு பெருமை என்பதால் அவர்களின் பெயர் விவரங்களை நான் இங்கு சொல்லப்போவதில்லை.

 இறைவனை உணர நான் மறையவேண்டும் !அதாவது நான் என்ற ஆணவம் விலக வேண்டும் என்பார்கள் சான்றோர்கள்.  அதன் பொருள் இன்று புரிந்தது !

 ஐந்து வயது சிறுவர்கள் தொடங்கி 80 வயது முதியஇளைஞ்ர்கள் வரை தங்களை மறந்து சேவையில் ஈடுபட்டனர். அவர்களின் “நான் “ மறைந்தது !  80 வயது இளைஞனின் மூப்பு மறைந்தது ! 20 வயது வாலிபனின் இளமை எனும் கர்வமும் தலை காட்டவில்லை . பதவியோ பட்டங்களோ தலை காட்டவில்லை ! எல்லோரும் சமம் என்ற சமன்பாடு !

 கலியுகத்தில் இறைவன் நேராக தோன்றுவதை விட சூட்சுமமாகவே தனது ஆசியை  வழங்குகின்றான் . அவ்வாறு அன்று இரண்டு வித ஆசிகள் கிடைத்ததாக தோன்றுகிறது.  ஒன்று எந்தவிதமான மேகக்கூட்டங்கள் இல்லாமல் கொளுத்தும் வெயில் திடீரென சில நிமிடங்கள் தூரல் விழுந்தது. இரண்டு  குறைந்தது இருநூறு இருநூற்றைம்பது வருடங்கள் மனித நடமாட்டம் இல்லாத புதர்மண்டிய இக்கோவிலில் ஒரு பாம்பையோ அல்லது தேளையோ அல்லது அசச்சுறுத்தும் விலங்குகளையோ  யாரும் பார்க்கவில்லை. 

 இதை ஒரு மூத்த அடியார்க்கு நான் சொல்லிய போது அவர் சொன்னது இன்று மட்டுமல்ல ஒவ்வொரு முறை நாங்கள் சேவை செய்யும் போது ஒரு நிமிடமாவது  மழை எங்களை ஆசீர்வதிக்கும்.

இறைவனை நேரில் தான் காண வேண்டும் என்று அவசியம் இல்லை.  அவனை எல்லோரும் உணரலாம் இப்பேர்ப்பட்ட சேவைகளில் ஈடுபடும் போது ! அண்ணாமலை அறப்பணி குழு செய்து வரும் சேவைகளில்  தாங்கள் ஈடுபட பண வசதியோ உடல் தெம்போ வயதோ ஒரு பொருட்டல்ல! தங்களால் இயன்ற சிறு உடலுதவி கூட சாதாரண பக்தரான உங்களை அடியாராக மாற்றும் ! முயற்சி செய்து பாருங்கள்

தொடர்பு 




தொலைபேசி  : திரு ராமச்சந்திரன்  -9884080543

குரங்கணில்முட்டம், இறையவளை உடனுறை வாலீஸ்வரர் கோவில்

தொண்டைநாட்டு தேவாரப்  பாடல் பெற்ற  தலங்களுள் ஆறாவது தலமாக அறியப்படும் குரங்கணில்முட்டம் (TNT 006), காஞ்சிபுரத்திற்கு அருகில், ஓரிக்கை, தூசி ...